செவ்வாய், 26 ஏப்ரல், 2016

இந்தியா திடீர் முடிவு:சீனா நாட்டின் பால் மற்றும் செல்போன் இறக்குமதிக்கு தடை!

0
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் செல்போன்கள் தரக்குறைவாகவும், பாதுகாப்பு இல்லாமையால் இருப்பதால் இந்தியா தடைச் செய்துள்ளது.மக்களவையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் திருப்தியளிக்காதலால், இந்தியா தடைச் செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஐ.எம்.இ.ஐ எண் இல்லாத ஒரு சில செல்போன்கள் தடைச் செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும், உலக வணிக அமைப்பு விதியின் படி தற்போது, குறிப்பிட்ட நாட்டின் இறக்குமதியை முழுமையாக தடைச் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.



Author Image
பதிவிட்டவர்: Govindaraj V

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக