வெள்ளி, 15 ஏப்ரல், 2016

இந்தியாவில் வாட்ஸ் ஆப்(பு) தடைசெய்யப்பட வாய்ப்பு

0

வாட்ஸ் ஆப் நிறுவனம், சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள பாதுகாப்பான ரகசிய தகவல் பரிமாற்ற சேவை காரணமாக, அதற்கு, மத்திய அரசு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான ட்ராய் விதிமுறைகளின்படி, ரகசிய தகவல்பரிமாற்ற சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எத்தகைய சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலாக இருந்தாலும், தேவைப்படின் அவற்றை இடைமறித்து, கண்காணிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது.



ஆனால், சமீபத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம், பாதுகாப்பான அதேசமயம், ரகசியமான தகவல்பரிமாற்ற சேவையை தொடங்கியுள்ளது. இதன்மூலமாக, வாட்ஸ் ஆப் வாடிக்கையாளர்கள் தங்களுக்குள் பகிரும் தகவல்களை கண்காணிக்க முடியாது.

அதில் ஒருவேளை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களும் இடம்பெற வாய்ப்புள்ளது. எனவே, இந்த சேவையை வாட்ஸ் ஆப் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும் என, வலியுறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு, வாட்ஸ் ஆப் மறுப்பு தெரிவித்தால், இந்தியாவில் அதன் சேவைக்கு தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

தொகுப்பு: கமலேஷ்.க
Author Image
பதிவிட்டவர்: Govindaraj V

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக